நண்பர்கள்Categories
|
|
சும்மாதான்
நானும் என் கணவரும் சும்மா எங்க மனசுல தோணுறத இங்க எழுதுறோம். தப்பா எடுத்துக்காதீங்க.....
முதல்வரின் இலவசத்திட்டம் : இலவசமாய் போனது மூன்று உயிர் | PM 1:00 |
Filed under:
அரசியல்
|
அய்யோ பாவம் .....
மனசாட்சியே இல்லையா ......
மனிதநேயம் தொலைந்து போனது.....
இது போன்ற பலவற்றை , 2007 மே மாதம் எங்கு பார்த்தாலும் மக்கள் பேசிக்கொள்வதை\நாம் பார்த்திருப்போம். மூன்று உயிர்களை எரித்து கொன்றதற்கு யார் காரணம்?
http://www.youtube.com/watch?v=GlPbPRMsZTk
என் தலைப்பிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்கு தோன்றி இருக்கலாம் .
சிறு வயதில் இருந்தே பத்திரிகை நிருபர் ஆக வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருந்தது.
நமது நாடு சுதந்திர அடையவும் , நாம் சுதந்திர காற்றை சுவாசிக்கவும் பத்திரிக்கைகள் பெரும் பங்காற்றின , பத்திரிக்கையின் இத்தகைய பெரும் தொண்டு மக்களின் நல்வாழ்விற்கு உறுதுணையாக இருந்தது ,நாளடைவில் பத்திரிகைகள் வியாபார நோக்குடன் செயல் பட ஆரம்பித்தது .
பதவி ஆசையில் குடும்ப சண்டையில் மாறனும் அழகிரியும் சண்டையிடுவதற்கு, பத்திரிகை என்னும் புனித பொருள்தான் கிடைத்ததோ! நடுநிலை செய்திகள் என்பதெல்லாம் மலையேறிப்போச்சி.
அந்த சம்பவம் நடந்த மறுநாள், "ஆ ஊ" என குதித்த மாறன் சகோதரர்கள், பின்னாளில் குடும்ப சண்டை முடிந்து சமரசம் ஆனதும், பலியானவர்களை மறந்தே போனார்கள்.
தினகரன் அலுவலகத்தில் உயிருடன் எரித்தவர்கள் வெளியே விடப்பட்டபோதும் அதே தினகரன் பத்திரிக்கையில் கூட ஒரு கண்டன செய்தியும் இல்லை........இன்னும் சொல்லபோனால் அந்த ஊழியர்களின் முதலாண்டு நினைவஞ்சலியைகூட வெளியிடவில்லை.....
ஆனால் வெட்டியான விஷயத்திற்கு செய்தி போடுவதாகட்டும், வீண் பிரச்சனைகளை உருவாக்குவதாகட்டும், இன்றைய பத்திரிகை உலகம் தூள் கிளப்புகிறது.
1 . ஒரு நாள் கூட ஒரு வார்த்தைகூட பாராளுமன்றத்தில் பேசாத மத்திய அமைச்சரை ஏன் என்று கூட கேக்காதவர்கள்தான் இன்றைக்கி பல பத்திரிகை நடத்திகொண்டிருக்கிரார்கள்.
2 . "PEN IS MIGHTIER THAN SWORD" இந்த பழமொழியை பொய்யாக்கி வரும் இன்றைய பத்திரிக்கைகளும் அதனை சார்ந்த ஊடகங்களும் , தன்னை எதிர்ப்போரை வசைபாடும் இவர்கள் (பிரா ஜட்டி நடிகர் என்று கிண்டல் செய்வது) எந்த வகையில் உயர்ந்தவர்கள். நடு பக்கத்தில் நடிகையின் "பின் அப்" படங்கள் போடுவது, "இவனுக்கும் அவளுக்கும் அது", என்றெல்லாம் எழுதவே நேரம் சரியாக இருக்கிறது இவர்களுக்கு.
3 . ஒரு சக பத்திரிக்கையாளனை உயிரோடு எரித்தவர்களை வெளியே சுதந்திரமாக உலவ விட்டபோது, ஏன் என்று எதிர்த்து கேள்வி கேக்க இயலாத நிலையிலா இன்றைய பத்திரிகை துறை இருக்கிறது.
http://www.thehindu.com/2009/12/10/stories/2009121054860700.htm
கலைஞர் முதல் கடைகோடி நிருபன் வரை தன்னை ஒரு பத்திரிகையாளன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்பட வேண்டும் என்று வருத்தத்துடன் சொல்ல வேண்டிய நிலை.
இத்தகைய மகான்கள் வாழும் இந்த புண்ணிய பூமியில் வாழ இயலாது உயிர் நீத்த அந்த சகோதரர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி .....
குறிப்பு : லட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்பட்டபோதே கண்டுகொள்ளாதவர்கள், இதற்காகவா விழித்தெழப்போகிறார்கள்
ஒரு வேளை நானும் பத்திரிகை துறையில் இணைந்திருந்தால் இவர்களைப்போல் வியாபாரியாக மட்டுமே மாறியிருப்பேனோ! நல்ல வேளையாக எனது சிறு வயது ஆசை நிராசை ஆனது..............
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
© 2008 சும்மாதான்
Design by Templates4all
Blog Templates created by Web Hosting Men
Converted to Blogger Template by BloggerTricks.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக