சும்மாதான்

நானும் என் கணவரும் சும்மா எங்க மனசுல தோணுறத இங்க எழுதுறோம். தப்பா எடுத்துக்காதீங்க.....

நானும் என் காதலும்..... AM 8:06

அன்பே என்றாள்!
அமைதியாய் நின்றேன்!

பிடித்திருக்கிறதா என்றாள்!
பார்வை மட்டும் வீசினேன்!

காதலிக்கிறாயா என்றாள்!
கண்ணீர் சிந்திவிட்டேன்!

காரணம் தான் என்ன?

கூலி வேலை செய்து
கஞ்சியூத்தும்
தந்தையை நினைக்கிறேன்!

பாத்திரம் தேய்த்து
படிக்க வைக்கும்
தாயை நினைக்கிறேன்!

இயலாது என்னால்!
இப்போது காதலிக்க!

2 கருத்துகள்:

கமலேஷ் சொன்னது…

அழகாக இருக்கிறது..வாழ்த்துக்கள்...

Sakthi சொன்னது…

athellam aarambathulaye yosikkanum..
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்